உள்நாட்டு செய்திகள்புதியவை

4 மாவட்டங்களுக்கு வெப்பநிலை அதிகரிப்பு எச்சரிக்கை

இன்றும் பிற்பகல் மற்றும் நாளை நாட்டின் சில பாகங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.

பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்

இந்த மாவட்டங்களில் வசிப்பவர்களை தீவிர வெப்ப நிலையில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க