உள்நாட்டு செய்திகள்புதியவை

தென்னாபிரிக்க ஜனாதிபதி மீண்டும் திரும்பினார்

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா 20 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் இன்று காலை 10:20 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா ஜப்பானில் நடைபெறும் ஜி -20 உச்சிமாநாட்டிற்கு செல்லும் வழியில் இன்று இலங்கையில் தரையிறங்கினார்.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் விமான நிலையத்தில் சென்று ஜனாதிபதி சிறில் ரமபோசா உள்ளிட்ட குழுவை வரவேற்றனர் .

இந்நிலையில் குறித்த குழு மதியம் 12:30 மணியளவில் நாட்டில் இருந்து மீண்டும் திரும்பியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க