உலகம்

சீனாவில் பேரூந்து ஒன்று ஆற்றில் மூழ்கியதில் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேர் உயிரிழப்பு !

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கைசவ் மாகாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் , வருடாந்த நுழைவு பரீட்சைக்கு தோற்றுவதற்காக பஸ் ஒன்றில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் வீதி விபத்தில் சிக்குண்ட பேரூந்து ஹாங்ஷன் என்ற ஆற்றில் பாய்ந்துள்ளது. இதில் பல்கலை மாணவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக , பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை வரை சீனாவில் 119 பேர் உயிரிழந்தும் , காணாமலும் போயுள்ளனர் என கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க