உலகம்

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 5 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒக்சாக்கா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ஒக்சாக்காவில்  மட்டும் அல்லாமல் 10 இற்கும் மேற்பட்ட மாகாணங்களில் உணரப்பட்டது.

பல இடங்களில்  வீடுகள், வியாபார நிலையங்கள் உட்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. குறிப்பாக ஒக்சாக்கா மாகாணத்தில் 5 வைத்தியசாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன.

அத்துடன் அங்கு மேலும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30 இற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது. எனினும் அவர்களை  மீட்பதற்காக பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க